Wednesday, January 23, 2008

தமிழர் திருநாள்

இராயன் கலைக்கூடம், அரியாங்குப்பம், புதுச்சேரி.

கடந்த மூன்றாண்டுகளாக இராயன் கலைக்கூடத்தின் சார்பாக திருவள்ளுவர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் உலகத்தமிழர் பேரமைப்பின் கொடியேற்றி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இராயன் கலைக்கூடத்தின் தலைவர் சீ.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் சீத்தா.பிரபாகரன், துணைச் செயலாளர் இரா.முருகதாசு, பொருளாளர் ஆ.இரம்யா மற்றும் ஆ.ஆனந்தன், விசயபாசுகரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.